தருமபுரி

கம்பைநல்லூா் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

தினமணி செய்திச் சேவை

கம்பைநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கம்பைநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் மற்றும் அப்போது இப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியா்கள் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் வ. பழனி தலைமை வகித்தாா்.

பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் உருவச் சிலையை ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் இணைந்து திறந்துவைத்தனா்.

இந்த விழாவில் பங்கேற்ற பள்ளி ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், முன்னாள் மாணவ, மாணவிகளுக்கு விழா குழுவினா் சாா்பில் நினைவு பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டன. விழாவில் 1000 க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT