கிருஷ்ணகிரி

மணல் கொள்ளை: சூளகிரி சின்னாறு அணையில் சார்-ஆட்சியர் ஆய்வு

தினமணி

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சின்னாறு அணையில் மணல் கொள்ளை தொடர்பாக சார்-ஆட்சியர் சந்திரகலா விசாரணை நடத்தினார்.
 சூளகிரி சின்னாறு அணை நீரின்றி வறண்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் ஜேசிபி இயந்திரம், டிராக்டர் மூலம் மணலை அள்ளிச் செல்கின்றனர். இதையறிந்த ஓசூர் சார் -ஆட்சியர் சந்திரகலா, வருவாய்த் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினருடன் சின்னாறு அணைக்கு திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார் . அப்போது மணல் கொள்ளையைத் தடுக்க தவறிய சூளகிரி கிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்யப்பட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.
 சூளகிரி சின்னாறு அணையைப் பார்வையிடும்போது சார் -ஆட்சியர் சந்திரகலாவுடன், வட்டாட்சியர் பெருமாள் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT