காவேரிப்பட்டணத்தில் அரசுப் பேருந்தை இயக்க விடாமல் தடுத்ததாக பேருந்து ஊழியர்கள் 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பேருந்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், காவேரிப்பட்டணம் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்தை இயக்க விடாமல் 3 பேர் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு வந்த காவேரிப்பட்டணம் போலீஸார், அவர்களை சமாதானப்படுத்தினர். ஆனால், அவர்கள் தொடர்ந்து இடையூறு செய்ததையடுத்து, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
அதில், அவர்கள் மிட்டப்பள்ளியைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சுந்தரம் (36), சுண்டேகுப்பத்தைச் சேர்ந்த ஓட்டுநர் கிருஷ்ணன் (36), நடத்துநர் சங்கர் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.