சொத்துத் தகராறில் முதியவர் கொலை: இருவர் கைது
கிருஷ்ணகிரி அருகே சொத்துத் தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே சொத்துத் தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள திம்மராயனஅள்ளியைச் சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி(32), காவேரி(32). உறவினர்களான இவர்கள் இருவருக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கோவிந்தசாமி, அவரது தந்தை ராஜமாணிக்கம் (60), பட்டம்மாள்(50), துளசி(80), உறவினர் ரூபா ஆகியோர் உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்டனர்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தில் கோவிந்தசாமி அளித்த புகாரின் பேரில், காவேரி, அவரது மனைவி செல்வி, காவேரியின் தந்தை கோவிந்தன் (60) ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். இதேபோல கோவிந்தன் அளித்த புகாரின் பேரில், ராஜமாணிக்கம், கோவிந்தசாமி ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
உயர் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு செல்லும் ராஜமாணிக்கம் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவேரி, கோவிந்தசாமி ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார், தலைமறைவான செல்வியைத் தேடி வருகின்றனர்.