முகப்பு
கிருஷ்ணகிரி

கிணற்றில் மூழ்கி மாணவர் சாவு

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார். 
சூளகிரி அருகேயுள்ள கங்கசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திரப்பா,  பத்தலபள்ளியில் உள்ள காய்கனி சந்தையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.  இவரது மகன் ராமன் (18), சூளகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து பொதுத்தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன், செம்பரசனபள்ளியில் உள்ள விவசாயக் கிணற்றில் குளிக்க சென்றார்.  அப்போது, அவர் நீரில் முழ்கினாராம். நீண்ட நேரமாகியும் அவர் மேலே வராததால்,  நண்பர்கள் அருகில் இருந்தவர்களை அழைத்து வந்தனர்.  பின்னர், அவர்கள் தேடியபோது, இறந்த நிலையில் கிடந்த ராமனின் சடலத்தை மீட்டனர்.
இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →