கிருஷ்ணகிரி

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு

ஒசூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றவர்களை கண்டுபிடிக்க, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

DIN

ஒசூரில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றவர்களை கண்டுபிடிக்க, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஒசூர் பஸ்தி கோபிகா கார்டன் குடியிருப்பைச் சேர்ந்த மல்லிகா, பாகலூர் சாலையில் உள்ள தனியார் வங்கியில் ரூ.1 லட்சம் எடுத்துள்ளார். பின் அந்தப் பணத்தை வங்கி முன் நிறுத்தப்பட்டிருந்த தனது இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார். அப்போது, அதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மல்லிகா எதிர்பாராத நேரத்தில் அவரை திசைதிருப்பி கண்ணிமைக்கும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை சீட்டை உடைத்து திருடிச் சென்றனர்.
பட்டப்பகலில் நிகழ்ந்த இந்த திருட்டுச் சம்பவத்தால் திகைத்த மல்லிகா, ஒசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், வங்கி அருகில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT