கிருஷ்ணகிரி

பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

DIN

பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
போராட்டத்தில் ஈடுபட்டோர், பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT