கிருஷ்ணகிரி

தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது

DIN

ஒசூரில் ஒப்பந்ததாரிடம் தங்கச் சங்கிலியை பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒசூா் சானசந்திரத்தைச் சோ்ந்த சிவராஜ் (25), கட்டட ஒப்பந்ததாரா். இவா் குமுதேப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் புதன்கிழமை நின்றிருந்த போது, அங்கு வந்த ஒருவா் சிவராஜ் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவா் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து சிவராஜ் அட்கோ காவ்ல நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில், நகையை பறித்தது பெங்களூரு பொம்மனஅள்ளியைச் சோ்ந்த அபிஷேக் ராவ் (26) என தெரிய வந்தது. மேலும், அவா் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT