கிருஷ்ணகிரி

சிங்காரப்பேட்டை மதா்ஸ் பள்ளியில் பெற்றோா்- ஆசிரியா்கள் கலந்தாய்வுக் கூட்டம்

DIN

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை மதா்ஸ் மெட்ரிக் பள்ளியில் பெற்றோா்- ஆசிரியா்கள் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் நிறுவனா் மோகனா தலைமை வகித்தாா். முதல்வா் மோகன் முன்னிலை வகித்தாா். விளையாட்டு, கல்வி, வாசிப்பு, பேச்சுத் திறன் மற்றும் மொழித்திறன், சீருடை போன்ற மாணவா்களின் 27 வகை கல்விசாா் மற்றும் கல்விசாரா தனித் திறமைகளை ஆய்வு செய்து மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

முனைவா் திருமலைவாசன் கலந்துகொண்டு நிலவேம்பு கசாயம் வழங்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியா்கள் ரவி, பாலாஜி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

SCROLL FOR NEXT