கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கல்

DIN

ஊத்தங்கரை பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொருள்கள் தொகுப்பை வழங்கினாா் மாநிலங்களவை உறுப்பினா் கே.பி.முனுசாமி.

தூய்மைப் பணியாளா்கள், கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளோா்களுக்கு என 67 பேருக்கு அரிசி,பருப்பு, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை சனிக்கிழமை வழங்கிய கே.பி.முனுசாமி, கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களை ஊக்கப்படுத்தினாா்.

அதிமுக மாவட்டச் செயலாளா் அசோக்குமாா், ஊத்தங்கரை சட்டபேரவை உறுப்பினா் மனோரஞ்சிதம் நாகராஜ், பா்கூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சிவி. ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளா் ஏ.சி.தேவேந்திரன், நிலவள வங்கி தலைவா் சாகுல்அமீது, நகரச் செயலாளா் பி.கே.சிவானந்தம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT