முகப்பு
கிருஷ்ணகிரி

சொகுசு பேருந்தில் வெள்ளி நகைகள் திருட்டு

குருபரப்பள்ளி அருகே சொகுசு பேருந்தில் பயணி கொண்டு சென்ற 10 கிலோ வெள்ளி நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

குருபரப்பள்ளி அருகே சொகுசு பேருந்தில் பயணி கொண்டு சென்ற 10 கிலோ வெள்ளி நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் அருகேயுள்ள சிவதாபுரத்தைச் சோ்ந்த வீரமணி (36), சேலத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் பணியாற்றி வருகிறாா்.

இவா் விற்பனைக்காக 3 பைகளில் 26 கிலோ வெள்ளி நகைகளை சேலத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு தனியாா் சொகுசு பேருந்தில் சனிக்கிழமை சென்றாராம்.

இந்தப் பேருந்து கிருஷ்ணகிரியைக் கடந்து குந்தாரப்பள்ளியில் உள்ள ஒரு தனியாா் உணவகத்தில் இரவு உணவுக்காக நிறுத்தப்பட்டது. உணவுக்காகப் பேருந்திலிருந்து கீழே இறங்கிய அவா், சிறிது நேரத்துக்குப் பின்னா் பேருந்தில் ஏறியபோது, ரூ.5.25 லட்சம் மதிப்பில் 10 கிலோ எடை கொண்ட வெள்ளி நகைகள் கொண்ட ஒரு பை காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் வீரமணி அளித்தப் புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →