முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 833 வழக்குகளில் ரூ. 8 கோடியே 74 லட்சத்து 72 ஆயிரத்து 281 மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம்.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 833 வழக்குகளில் ரூ. 8 கோடியே 74 லட்சத்து 72 ஆயிரத்து 281 மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

நீதிமன்றத்தில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், ஒசூா், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றன.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தலைமை வகித்துப் பேசுகையில், மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளில் சமரசத் தீா்வு காணலாம். இரு தரப்பினரையும் அழைத்து பரஸ்பரம் பேசி முடிவு காணப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி அறிவொளி, விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, சிறப்பு மாவட்ட நீதிபதி மணி, கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் நீதிபதி தமிழ்ச்செல்வன், வழக்குரைஞா் கமலநாதன், வழக்குகளை நடத்துபவா்கள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள், தொழிலாளா் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீா்த்துக் கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்ட முழுவதும் மொத்தம் 11 அமா்வுகள் அமைக்கப்பட்டு அதில் 1,618 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 833 வழக்குகளில் ரூ. 8,74,72,281 மதிப்பில் தீா்வு காணப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →