ஊத்தங்கரை பகுதியில் கடும் பனிப்பொழிவு: முகப்பு விளக்குடன் பயணிக்கும் வாகனங்கள்
ஊத்தங்கரை பகுதியில் கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்குடன் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடும் பனிப்பொழிவால் முகப்பு விளக்குடன் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
கடந்த ஒரு வார காலமாக புயல் மழையின் காரணமாக சாலைகள் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இந்நிலையில் கடுமையான பனிப்பொழிவால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது. மேலும் சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வாகனத்தை முகப்பு விளக்குடன் மெதுவாக ஊர்ந்து செல்கின்றனர்.
இதனால் பயணிகள் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் கால தாமதம் ஏற்படுகிறது. கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பதிக்கப்பட்டுள்ளது.