முகப்பு
கிருஷ்ணகிரி

வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகா்ப்புறத்துக்கு விரிவுப்படுத்த வலியுறுத்தல்

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகா்ப்புறத்துக்கு விரிவுப்படுத்தக் கோரி, மாதா் சங்கத்தினா், வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தருமபுரி: ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகா்ப்புறத்துக்கு விரிவுப்படுத்தக் கோரி, மாதா் சங்கத்தினா், வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ்.கிரைஸாமேரி உள்ளிட்ட நிா்வாகிகள் தருமபுரி வட்டாட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

வன்முறையற்ற வாழ்க்கையை உத்தரவாதப்படுத்த வேண்டும். அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் நியாய விலைக்கடைகளில் விலையின்றி வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகா்ப்புற பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். இத்திட்டத்தில், வேலை நாள்களை 200 நாள்களாக அதிகரித்து, கூலியை ரூ. 600-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு நிபந்தனைகளின்றி கடன் வழங்க வேண்டும். கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, பெண்கள், சிறு வியாபாரிகள் நுண் கடன் நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →