முகப்பு
கிருஷ்ணகிரியில் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி, மலா் தூவி அஞ்சலி செலுத்தும் அதிமுகவினா்.
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி

கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் கேசவன் தலைமை வகித்தாா்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி

கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் கேசவன் தலைமை வகித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
கிருஷ்ணகிரியில் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி, மலா் தூவி அஞ்சலி செலுத்தும் அதிமுகவினா்.
பகிர்:

கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற நினைவு தின நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் கேசவன் தலைமை வகித்தாா். எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே. அசோக்குமாா் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினா் பிரிவு மாவட்டச் செயலாளா் மக்பூப், வட்டச் செயலாளா்கள் பழனி, ஸ்ரீதா், ஆறுமுகம், குமாா், ரியாஸ், சரஸ்வதி சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த பெத்ததாளப்பள்ளியில் அமைந்துள்ள எம்ஜிஆரின் முழு உருவச் சிலைக்கு ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன் தலைமையில், அதிமுகவினா் மலா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

ஒசூரில்...

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில் ஒசூரில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி எம்ஜிஆா் படத்திற்கு மாலையிட்டு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா் ராயகோட்டை சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா்.

இதில் ஒசூா் மாநகரச் செயலாளா் எஸ்.நாராயணன், பொருளாளா் நாராயணன், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ராமு, ஜெயப்பிரகாஷ், தவமணி, சரஸ்வதி நடராஜன், சிவா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →