என் மகள் சாரா ஸ்டாரானது மகிழ்ச்சி: ஏ.எல். விஜய்
சாரா அர்ஜுன் குறித்து ஏ. எல். விஜய்...
இயக்குநர் ஏ. எல். விஜய் நடிகை சாரா அர்ஜுன் குறித்துப் பேசியுள்ளார்.
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஏ. எல். விஜய். இவர் இயக்கிய மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், சைவம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
நடிகர் விஜய்யை வைத்து தலைவா என்கிற அரசியல் திரைப்படத்தையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையாக உருவான தலைவி திரைப்படத்தையும் இயக்கி கவனிக்கப்பட்டார்.
Advertisement
இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய சாரா அர்ஜுன் தெய்வ திருமகள் மற்றும் சைவம் படங்களில் நடித்து புகழ்ப்பெற்றார். தற்போது, துரந்தர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் இந்தியளவில் கவனிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஏ. எல். விஜய், “சாரா எனக்கு மகள் போன்றவர். தன் பெற்றோரிடம் இருப்பதைவிட என்னிடமே அதிகமாக இருந்தாள். பள்ளி விடுமுறைகளின் போது என் வீட்டிற்கு வந்துவிடுவார். இப்போதும், வாரத்திற்கு ஒருமுறையாவது பேசிவிடுவோம்.
துரந்தர் பார்த்து முடித்ததும் சாராவை அழைத்து அப்பாவும் அம்மாவும் பெருமையடைந்திருப்பார்களே எனச் சொன்னேன். அதற்கு அவள், நீங்களும் அடைந்திருப்பீர்கள் என்றாள். என்னை மாமா என அழைத்தாலும் சாரா என் மகள்தான். அவளை நினைத்து மகிழ்ச்சியா இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.