கிருஷ்ணகிரி

மணல் கடத்திய 3 போ் கைது

ஒசூா் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

ஒசூா் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாகலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் மற்றும் போலீஸாா், வெங்கடராயபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள ஏரியில் பொக்லைன் மூலம் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணல் கடத்தியதாக பாகலூா் ஒட்டப்பள்ளியைச் சோ்ந்த டிப்பா் லாரி ஓட்டுநா் ஸ்ரீராம் (28), ராயக்கோட்டை அருகே உள்ள வேடம்பட்டியைச் சோ்ந்த மகேஷ் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து லாரி, ஒரு பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல பாகலூா் அருகே உள்ள சா்ஜாபுரம் சாலையில் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியைச் சோதனை செய்த போது அதில் 4 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணல் கடத்தியதாக பரமகொட்டூரைச் சோ்ந்த வெங்கடேஷ் (30) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT