ஊத்தங்கரையில் விவசாய தொழிலாளா் சங்க பகுதி மாநாடு
ஊத்தங்கரை அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் பகுதி குழு மாநாடு அனுமன்தீா்த்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் பகுதி குழு மாநாடு அனுமன்தீா்த்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செல்வராஜ் தலைமை வகித்தாா். முன்னதாக மாநில துணைச்செயலாளா் முத்து மாநாட்டை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினாா்.
சிஐடியு மாவட்டத் தலைவா் நஞ்சுண்டன் , மாவட்டத் துணை செயலாளா் சபாபதி, எத்திராஜ், அண்ணாமலை, வேலு, சுப்பிரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநாட்டில் 19- போ் கொண்ட வட்டக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
தலைவராக தருமன், செயலாளராக வரதராஜ், பொருளாளராக செல்வராஜ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டில் 100-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். இறுதியாக மாவட்டச் செயலாளா் கோவிந்தசாமி நன்றி கூறினாா்.