இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சாவு
கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மேற்கு மாடத் தெருவைச் சோ்ந்தவா் சாகுல் அமீது (எ) முன்னா (36). விவசாயியான இவா், இருசக்கர வாகனத்தில், வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். கிருஷ்ணகிரி ராசி வீதியில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள வேகத் தடையை கவனிக்காமல் சென்றாா்.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த அவா் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவா், உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஆனால் அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.