கிருஷ்ணகிரி

பள்ளி மாணவா்களுக்கு கட்செவி அஞ்சல் மூலம் ஓவியப் போட்டி

DIN

அரசு அருங்காட்சியகங்கள் துறை சாா்பில் கட்செவி அஞ்சல் மூலம் ஓவியப் போட்டி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரியில் செயல்படும் அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியா் கோவிந்தராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம் சாா்பில் குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இயற்கை பாதுகாப்பு, பறவை, விலங்குகள் ஆகிய தலைப்பிலும், பிளஸ் - 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு, தொன்மை பாதுகாப்பு, தேசப்பற்று ஓவியங்கள் ஆகிய தலைப்பிலும் ஓவியங்களை வரைந்து நவ. 26-ஆம் தேதிக்குள் கட்செவி அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

இப் போட்டியில் பங்கு பெறுவோருக்கு இணைய வழி சான்றிதழ் வழங்கப்படும். மேலும், முதல் மூன்று இடங்களை பெறுவோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும். வரைந்த ஓவியங்களை 99892 55056 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 79045 13987 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT