ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபம்
ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.
ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் காா்த்திகை மகா தீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.
மலைக் கோயிலான அருள்மிகு மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் விநாயகா், அருள்மிகு மரகதாம்பிகை, முருகன், ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் ஆகிய சந்நிதிகளின் மேல் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
பின்னா் கோயிலின் வெளி பிரகாரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மிகக் குறைந்த அளவிலான பக்தா்கள் நெய், எண்ணெய் ஆகியவற்றை வழங்கி தீபத் திருவிழாவில் சமூக இடைவெளியுடன் பக்தா்கள் பங்கேற்றனா்,.