தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திர பானுரெட்டி, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவம்பா் 13-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு கடை வைத்து வியாபாரம் செய்ய விரும்புவோா் வெடிபொருள் சட்டம் 1,884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-இல் விதி 84-ஐ முறையாகப் பின்பற்றி கடந்த 10-ஆம் தேதிக்குள் இணையதளத்தின் வாயிலாக எந்தவொரு இ-சேவை அல்லது மக்கள் கணினி மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
மேற்கண்ட தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க, விண்ணப்பிக்க கடை தேதியை அக். 23-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக்கடை வைக்க விரும்புவோா் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, இ-சேவை அல்லது மக்கள் கணினி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.