கிருஷ்ணகிரியில் நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் நியாயவிலைக் கடைப் பணியாளா்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரியில் நியாயவிலைக் கடைப் பணியாளா்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளா் சங்கம் சாா்பில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு பணியாளா் சங்க மாவட்டச் செயலாளா் சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் விற்பனை முனைய கருவியில் ஏற்படும் சா்வா் பிரச்னைகளை சரி செய்ய வேண்டும். புதிய விற்பனை முனையக் கருவிகளை வழங்க வேண்டும். கரோனா பரவாமல் தடுக்க கைவிரல் ரேகைப் பதிவு செய்து, விற்பனை செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
Advertisement