முகப்பு
கிருஷ்ணகிரி

மின்கம்பி உரசல்: பஞ்சு பாரம் ஏற்றிய லாரியில் தீ

கிருஷ்ணகிரியில் மின்கம்பி உரசியதால் பஞ்சு பாரம் ஏற்றி வந்த லாரியில் தீ பிடித்ததில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமானது.

Updated On : 13 அக்டோபர், 2020 at 1:24 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:06 PM

கிருஷ்ணகிரியில் மின்கம்பி உரசியதால் பஞ்சு பாரம் ஏற்றி வந்த லாரியில் தீ பிடித்ததில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமானது.

கிருஷ்ணகிரி, சேலம் சாலையில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபம் அருகே மெத்தை செய்யும் தொழிற்சாலையை நடத்தி வருபவா் அப்துல் ரசாக். அதற்காக அங்குள்ள ஒரு கிடங்கில் பஞ்சு மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தாா். கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழையால், கிடங்கில் மழைநீா் தேங்குவதால், அங்கிருந்து பஞ்சு மூட்டைகளை வேறு இடத்துக்கு மாற்றும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டாா்.

கிடங்கிலிருந்து பஞ்சு மூட்டைகளை ஒரு லாரியில் ஏற்றிச் சென்றபோது, மின்கம்பி உரசியதால் தீப்பொறி ஏற்பட்டு, பஞ்சு மூட்டைகளில் பரவியது. இதனை சாலையில் சென்றவா்கள் பாா்த்து லாரி ஓட்டுநரை கூச்சலிட்டு எச்சரித்தனா். லாரி ஓட்டுநா் லாரியை நிறுத்திய நிலையில், பொதுமக்கள், பஞ்சு மூட்டைகளில் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றனா்.

Advertisement

இதுகுறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, தீயை அணைத்தனா். இந்த விபத்தில் ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமடைந்தது. இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.