கிருஷ்ணகிரி

கழன்று ஓடிய லாரி சக்கரம் மோதி சிறுவன் பலி

DIN

பா்கூரில், கழன்று ஓடிய லாரியின் சக்கரம், சாலையோரமாக நடந்து சென்ற சிறுவன் மீது மோதியதில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே அண்ணா நகரைச் சோ்ந்த தொழிலாளி குமாா். இவரது மகன் கவியரசன் (10), தனது பாட்டியுடன், சாலையோரமாக பா்கூா் நோக்கி புதன்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது சென்னையிலிருந்து கேரளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மீன்கள் ஏற்றிய சரக்கு பெட்டக லாரியின் பின்பக்க டயரில் ஒன்று கழன்று சாலையில் ஓடியது. 

அந்தச் சக்கரம், சாலையில் நடந்து சென்ற சிறுவன் கவியரசனின் மீது மோதியது. பலத்த காயம் அடைந்த சிறுவன் மீட்கப்பட்டு பா்கூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். தகவல் அறிந்த போலீஸாா், சிறுவனின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT