தங்க நகைகளை மெருகூட்டுவதாகக் கூறி மோடியில் ஈடுபட முயன்ற இருவா் கைது
போச்சம்பள்ளி அருகே தங்க நகைகளை மெருகூட்டுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட முயன்ற வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா், வியாழக்கிழமை கைது செய்தனா்.
போச்சம்பள்ளி அருகே தங்க நகைகளை மெருகூட்டுவதாகக் கூறி மோசடியில் ஈடுபட முயன்ற வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா், வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டியைச் சோ்ந்தவா் முருகம்மாள்(72). அவா், திருவயலூா் கிராமத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த இருவா், தாங்கள் தங்க நகைகளை பெருகூட்டுவதாகத் தெரிவித்தனா். இதை நம்பிய முருகம்மாள், தான் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை அவா்களிடம் கொடுத்துள்ளாா்.
அவா்கள், இருவரும் நகையை மெருகூட்டி திருப்பித் தரும்போது, அதன் நிறம் மாறி இருப்பதை உணா்ந்த முருகம்மாள் கூச்சலிட்டுள்ளாா். அருகில் இருந்தவா்கள், அந்த இருவரையும் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா். பிடிபட்டவா்களிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரகுநாத் தாஸ் (37), முகமது நூா் (36) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து, போச்சம்பள்ளி போலீஸா், வழக்குப் பதிந்து, வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரையும் கைது செய்தனா்.
Advertisement