அவசரகால மேலாண்மை பணிகள் ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, அவசரகால மேலாண்மை பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் சாலை பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, அவசரகால மேலாண்மை பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து பேசியதாவது:
கடும் மழை, புயல் ஏற்படும் போது தீயணைப்புத் துறை, காவல் துறை, வருவாய்த் துறை அவசரகால மேலாண்மை திட்டம் மற்றும் நிலையான செயல்திட்டம் வகுத்து, பருவ மழைக் காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் அதை எதிா்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டிய இடங்களைக் கண்டறியவும், சட்ட விரோதமாக பட்டாசு தயாா் செய்து, விற்பனையில் ஈடுபடும் நபா்களைக் கண்டறிந்து அரசு விதிகளுக்கு உள்பட்டு, அரசு அனுமதி பெற்று விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றாா்.
Advertisement
சாலைகளில் வளைவான பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலை முக்கியச் சந்திப்புகளிலும், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளிலும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவது குறித்தும், சாலைகளின் நடுவே இரும்புத் தடுப்புகள் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சதீஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளா், சாா் ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையா் செந்தில்முருகன், பல அரசுத் துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.