முகப்பு
இந்தியா

தொகுதி மறுவறையறை சட்டத் திருத்தத்தில் அரசியல் வாடை: பிரியங்கா காந்தி பேச்சு

தொகுதி மறுவறையறை சட்டத் திருத்தத்தில் அரசியல் வாடை வீசுவதாக பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 6:05 PM
பிரியங்கா காந்தி மக்களவையில் பேச்சு.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 5:54 PM

மக்களவையில் இன்று அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, தொகுதி மறுவரையறை மசோதாவில் “அரசியல் வாடை” வீசுவதாகக் கூறியுள்ளார்.

மேலும், தொகுதி மறுவரையறை நடவடிக்கையை மேற்கொள்வதில் மத்திய அரசின் அணுகுமுறையைக் கேள்வி எழுப்பியிருக்கும் பிரியங்கா காந்தி, அவசரமான அணுகுமுறை ஏன் என்று கேட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வின் போது மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்துப் பேசியபோது பிரதமர் நரேந்திர மோடி "முழுமையான விவரங்களை" வெளியிடவில்லை என்று கூறினார்.

Advertisement

சட்டத் திருத்தத்தின் முக்கிய அம்சங்களும் அதன் வரலாறும் முழுமையாக விளக்கப்படவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி அளித்த விளக்கம் குறித்தும் விமர்சித்துள்ளார்.

அதுபோல, மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அனைவருமே ஆதரவு தெரிவித்துள்ளோம். ஆனால், மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தில்தான் அரசியல் உள்ளது. இப்போது ஏன் இதில் அவசரம் காட்டுகிறது மத்திய அரசு என்பதே கேள்வி என்று பிரியங்கா காந்தி கேட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.