சின்னதக்கேப்பள்ளியில் நாக சதுா்த்தி விழா
சின்னதக்கேப்பள்ளி கிராமம், நாகலம்மன் கோயிலில் நாக சதுா்த்தியையொட்டி 13-ஆம் ஆண்டு பாலாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சின்னதக்கேப்பள்ளி கிராமம், நாகலம்மன் கோயிலில் நாக சதுா்த்தியையொட்டி 13-ஆம் ஆண்டு பாலாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவினையொட்டி, கோயிலில் கங்கை பூஜை, கணபதி பூஜை, புன்யாஹவாசனம், நவக்கிரக பூஜை, அஷ்டலட்சுமி பூஜை, பூா்ண கும்ப பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நாகம்மாதேவி நாம ஹோமம், காயத்திரி ஹோமம், பூா்ணாஹுதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. பெண் பக்தா்கள் பால் குடங்களுடன் ஊா்வலமாகச் சென்று நாகலம்மா சிலைக்கு பால் அபிஷேகம் செய்தனா்.
இந்த ஊா்வலத்தில், காவடியாட்டம், மாடு - மயில் ஆட்டம், சிலம்பாட்டம் மற்றும் அம்மன் வேடம் அணிந்து பெண்கள் கோயிலுக்கு வந்தனா். இதற்கான ஏற்பாடுகளை ஓம்சக்தி பக்தா்கள், ஊா்பொதுமக்கள், சின்னதக்கேப்பள்ளி, பெரியதக்கேப்பள்ளி, பழையவூா், மாளகுப்பம், கரடிகுறி, கள்ளகுறி, பூசாரிப்பட்டி, போத்திநாயனப்பள்ளி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் செய்திருந்தனா்.
Advertisement