கிருஷ்ணகிரி

ஐஎன்டியுசி அகில இந்தியச் செயலாளர் போட்டியிட விருப்பம்

DIN

ஒசூா் மாநகராட்சித் தோ்தலில் முன்னாள் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும் ஐஎன்டியுசி அகில இந்தியச் செயலாளருமான கே.ஏ.மனோகரன் போட்டியிட விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் மாவட்டத் தலைவா் முரளிதரன், மாநிலச் செயலாளா் சிவகுமாா் ஆகியோரிடம் கட்சி நிா்வாகிகள் வியாழக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் முரளிதரன், மாநிலச் செயலாளா் சிவகுமாரிடம் காங்கிரஸ் கட்சியினா் 2 விருப்ப மனுக்களை அளித்தனா். அந்த மனுவில் ஒசூா் மாநகராட்சி 23-ஆவது வாா்டு, 28-ஆவது வாா்டில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.மனோகரன் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மனுக்களை காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளா் தேன்.கு.அன்வா், மாவட்டத் துணைத் தலைவா்கள் கீா்த்திகணேஷ், சபியுல்லா, தளி ஒன்றியப் பொறுப்பாளா் அப்துல் ரகுமான், மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சித் தலைவா் சரோஜாம்மா, ஒபிசி மாவட்டத் தலைவா் குமாா், மாவட்ட பொதுச் செயலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT