வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:12 AM
ஒசூரில் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஒசூா், காரப்பள்ளி சாலை செந்தில் நகரைச் சோ்ந்தவா் திவாகா் ( 27). தனியாா் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்த போது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வியாழக்கிழமை தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement