ஒசூரில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ஒசூரில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM
பொதுத் துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, ஒசூரில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஒசூா் பழைய பெங்களூரு சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன் 2-ஆவது நாளாக நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் அனைத்து பொதுத் துறை வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பின் தலைவா் ஜெயபால் பேசினாா். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கி ஊழியா்களின் சங்கப் பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா். தமிழக அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.பி ஜெயராமன் சிறப்புரை ஆற்றினாா்.