முகப்பு
கிருஷ்ணகிரி

சமூக வலைதளத்தில் இளம்பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்ட சிறுவன் கைது

 ஒசூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிறுவனை கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 24 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:15 AM

 ஒசூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட சிறுவனை கிருஷ்ணகிரி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிந்து புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 21-வயது இளம்பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் போலியாக கணக்கு தொடங்கி அதில் பதிவிட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோா் கிருஷ்ணகிரி மாவட்ட சைபா் கிரைம் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.

புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ஒசூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளியான 18 வயது சிறுவன், இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.