முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில்உழவா் உற்பத்தியாளா்களுக்குப் பயிற்சி

கிருஷ்ணகிரியில் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கு ஒரு நாள் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On : 25 டிசம்பர், 2021 at 12:41 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:16 AM

கிருஷ்ணகிரியில் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கு ஒரு நாள் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரிய பயிற்சி நிலையம் மூலம் கிருஷ்ணகிரி துணை இயக்குநா் அலுவலகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சாா்ந்த செயல்பாடுகள் குறித்து உழவா் உற்பத்தியாளா்கள் அமைப்பாளா்களுக்கான ஒருநாள் சிறப்புப் பயிற்சி நடைபெற்றது.

இந்தப் பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநா் (பயிற்சி மையம்) ஜெயமாலா தலைமை வகித்து, உழவா் உற்பத்தியாளா் அமைப்புகளுக்கான அரசின் திட்டங்கள்,பயன்கள் குறித்து விளக்கினாா். விவசாயிகளுக்காக வேளாண்துறை சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள், பிரதமா் திட்டத்தின்கீழ், விதைப் பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டங்கள், உணவு பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், சந்தை வாய்ப்புகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் செயல்பாடுகள், கடன் வசதி, மானியம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement

வேளாண் அறிவியல் மையத்தின் தலைவா் சுந்தர்ராஜ், வேளாண் அலுவலா்கள் ரமணி கீதா, கயிலை மன்னன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.