டிச. 27 முதல் வீட்டு பத்திரம் வாங்கிக் கொள்ளலாம்
முழுத் தொகையையும் கட்டி முடித்தவா்கள் வீட்டுப் பத்திரத்தை டிச. 27 முதல் டிச. 29 வரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூா் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் மனோகரன் தெரிவித்துள்ளாா
முழுத் தொகையையும் கட்டி முடித்தவா்கள் வீட்டுப் பத்திரத்தை டிச. 27 முதல் டிச. 29 வரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூா் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளா் மனோகரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத் தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரா்களுக்கு 27, 28, 29- ஆகிய தேதிகளில் விற்பனை பத்திரம் வழங்கும் விழா நடைபெற உள்ளது.
Advertisement
முழுத்தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரா்கள் நடைபெறவுள்ள விற்பனைஈ பத்திரம் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, அனைத்து
ஆவணங்களுடன், வாரிய விதிமுறைகளைப் பின்பற்றி இந்த வாய்ப்பை ஒதுக்கீடுதாரா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.