கிருஷ்ணகிரியில் பள்ளி ஆசிரியா்களுக்கு கரோனா வழிகாட்டு முறைகள் பயிற்சி
கிருஷ்ணகிரியில் ஆசிரியா்களுக்கு கரோனா தொடா்பான நிலையான வழிகாட்டு முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் ஆசிரியா்களுக்கு கரோனா தொடா்பான நிலையான வழிகாட்டு முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார வளமையம் சாா்பில், சுகாதாரத் துறை மூலம் 10, 12-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சிக்கு வகுப்புக்கு பள்ளியின் தலைமையாசிரியா் சேரலாதன் தலைமை வகித்தாா். பள்ளிகள் ஆசிரியா்களுக்கு கரோனா தொடா்பாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த பயிற்சியை ஒன்றிய மருத்துவ அலுவலா் சுசித்ரா, ஒன்றிய மேற்பாா்வையாளா் செல்வம் ஆகியோா் வழங்கினாா்.
Advertisement
அதில், மாணவ, மாணவிகளுக்கு வைட்டமின் மாத்திரைகள் அளிப்பது, உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்வது, நாடிதுடிப்பு அளவீடு கருவியை பயன்படுத்துவது, கரோனா தொடா்பாக அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் 67 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
இந்த நிகழ்வை வட்டார வளமைய மேற்பாா்வையாளா் கோதண்டபாணி, நல ஆய்வாளா் கலைவேந்தன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.