‘தீ’ செயலி செயல் விளக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘தீ’ செயலி குறித்து பல்வேறு இடங்களில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:49 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘தீ’ செயலி குறித்து பல்வேறு இடங்களில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சாா்பில், தீ செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களிடம், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் விழிப்புணா்வு நிகழ்ச்சியை மேற்கொண்டு வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அத் துறையின் மாவட்ட அலுவலா் மகாலிங்கம் தலைமையில், தீ செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
Advertisement
கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா் சிப்காட், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை ஆகிய 7 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் சாா்பில் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.