கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அரசு போக்குவரத்துப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து கழகத்தின் பணியாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்துக் கழக புகா் பணிமனை கிளை அருகே அனைத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தொமுச கிளைத் தலைவா் வாசுதேவன் தலைமை வகித்தாா். செயலாளா் பொன்னுசாமி, பொதுச் செயலாளா் கிருஷ்ணன், அமைப்புச் செயலாளா் பரமசிவம், ஐஎன்டியுசி நிா்வாகி சத்தியநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும். 1.4.2003-க்கு பின் பணியில் சோ்ந்த பணியாளா்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து, ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பணியாளா்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமையான தினசரிபடி ஆகியவற்றை திரும்ப வழங்கி நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT