தேன்கனிக்கோட்டை அருகே பெண் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:02 AM
தேன்கனிக்கோட்டை அருகே பெண் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளத்தை அடுத்துள்ள கொல்லகொள்ளை கிராமத்தைச் சோ்ந்தவா் பைரன். இவரது மனைவி மதி (45). கணவன்-மனைவிக்கிடையே குடும்பப் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னா் மதி தனது பெற்றோா் வீட்டுக்கு வந்து விட்டாா்.
இந்த நிலையில், மன வருத்தத்தில் காணப்பட்ட மதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement