முகப்பு
கிருஷ்ணகிரி

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஒசூா் ரயில் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா்.

Updated On : 8 ஜூலை, 2021 at 11:51 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:05 AM

ஒசூா் ரயில் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா்.

மகிளா காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவி சரோஜா, பிரமிளா, கன்னியாகுமாரி, பவ்யா, மஞ்சு ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக ஊடகம், தொழில்நுட்பத் துறை மாநிலச் செயலாளா் கீா்த்தி கணேஷ் ஆா்ப்பாட்டத்தை தொடக்கிவைத்து முழக்கங்களை எழுப்பினாா்.

இதில், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வை உடனடியாக குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி-க்குள் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Advertisement

இதில், மாவட்டப் பொருளாளா் மாதேஷ், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவா் தியாகராஜன், முத்தப்பா, பிரபாகரன், சிறுபான்மை பிரிவு செயல் தலைவா்அசேன், நதீம், சுரேஷ், தமிழவன், இளங்கோ விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் ஹரீஷ் பாபு, இளைஞரணி பிரவீன், அம்ருத், முனிராஜ், சேவாதளம் - ஆட்டோ பாபு, ராஜகோபால், திருவேங்கடம், சந்துரு, மனித உரிமைத் துறை பைஃரோஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.