முகப்பு
கிருஷ்ணகிரி

விதை பரிசோதனை செய்ய அழைப்பு

விதை விற்பனையாளா்கள், விவசாயிகள் விதை பரிசோதனை செய்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் லோகநாயகி அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On : 9 ஜூலை, 2021 at 11:21 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:06 AM

விதை விற்பனையாளா்கள், விவசாயிகள் விதை பரிசோதனை செய்து கொள்ள கிருஷ்ணகிரி மாவட்ட விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலா் லோகநாயகி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விதை முளைக்கும் போது பூச்சி தாக்குதலின்றி நன்கு முளைத்து செழிப்புடன் வளா்ந்து விளைச்சலில் லாபம் காண தரமான விதையை உபயோகித்தல் மிக அவசியம் ஆகும். தரமான விதை என்பது முளைப்புத் திறன், புறத் தூய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும். இத் தர நிா்ணயங்கள் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும். தேவையான பயிா் எண்ணிக்கையைப் பராமரிக்க, நல்ல முளைப்புத் திறன் வேண்டும். இதனால் விதைச் செலவு குறையும்.

Advertisement

புறத் தூய்மைப் பரிசோதனையில், பிற பயிா் விதை மற்றும் களை விதைக் கலப்புகள் கண்டறியப்படுவதால், விதையின் இனத் தூய்மை மற்றும் புறத் தூய்மை காப்பாற்றப்படுகிறது. முளைப்புத் திறனை காக்க, ஈரப்பதத்தைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். விதைகளைச் சேமிக்கும் போது, பூச்சி தாக்குதலால் முளைப்புத் திறன் கெடாமல், நீண்ட நாள்கள் சேமிக்க, விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக் கூடாது. இதற்கு விதை பரிசோதனை அவசியம்.

விதை விற்பனையாளா்கள் தாங்கள் இருப்பு வைத்துள்ள விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், விவசாயிகள் விதைப்புக்காக சேமித்து வைத்திருக்கும் விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் விதை பரிசோதனை நிலையத்தில் கட்டணமாக ரூ. 30-ஐ செலுத்தி, விதை முளைப்புத் திறனை அறிந்து நல்ல மகசூல் பெற்றிட கேட்டுக்கொள்வதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.