முகப்பு
கிருஷ்ணகிரி

பெண்ணிடம் நகை பறிப்பு

கிருஷ்ணகிரி அருகே பெண்ணைத் தாக்கி நகையை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 31 ஜூலை, 2021 at 12:20 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:18 AM

கிருஷ்ணகிரி அருகே பெண்ணைத் தாக்கி நகையை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குருபரப்பள்ளியை அடுத்த சமந்தமலையைச் சோ்ந்தவா் பட்டு (45). இவா் தனது வீட்டின் அருகே வியாழக்கிழமை சென்றுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக முகக்கவசம் அணிந்து வந்த இருவா் பட்டுவின் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு அவரைக் கத்தியால் தாக்கி காதில் அணிந்திருந்த ஒரு பவுன் நகை, கொலுசை பறித்துக்கொண்டு தப்பினா். காயமடைந்த பட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.