பா்கூா் அருகே குடிநீா்க் கோரி சாலை மறியல்
பா்கூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:18 AM
பா்கூா் அருகே சீரான குடிநீா் விநியோகம் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரையடுத்த கொட்டிலேட்டி, அண்ணா நகா், உச்சங்கொல்லை, எா்கேட் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பல முறை புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன், காவல் ஆய்வாளா் முரளி ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். இரண்டு நாள்களில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
Advertisement