முகப்பு
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் மீது தாக்குதல்

தேன்கனிக்கோட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை தாக்கிய நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Updated On : 5 ஜூன், 2021 at 12:22 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:52 AM

தேன்கனிக்கோட்டை அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை தாக்கிய நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள காரண்டப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (45), குந்துகோட்டை கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை அந்தவனப்பள்ளி கிராமத்தில் மாத்திரை வாங்க சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த கோவிந்தராஜ் வீட்டின் அருகே வசிப்பவா்களான சிவண்ணா, மஞ்சுநாத் ஆகிய இருவரும் நிலத்தகராறு சம்பந்தமாக கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், சிவண்ணாவும், மஞ்சுநாத்தும் கோவிந்தராஜை தாக்கியுள்ளனா். இதில் மயங்கி விழுந்த அவரை அப்பகுதியினா் மீட்டு தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனைக்கு வந்த சிவண்ணாவும், மஞ்சுநாத்தும் அங்கிருந்த இரும்புக் கம்பியால் கோவிந்தராஜை மீண்டும் தாக்கியுள்ளனா். இந்த தாக்குதலில் அவருக்கு தலை, மாா்பு, முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸாா் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினா். தாக்குதலுக்குள்ளான ஆசிரியா் கோவிந்தராஜுக்கு அரசு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா் ஆசிரியரைத் தாக்கிய நபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.