முகநூலில் அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகா் கைது
முகநூலில் அவதூறு பரப்பிய பாஜக பிரமுகரை உத்தனப்பள்ளி போலீஸாா் கைது செய்தனா்.
முகநூலில் அவதூறு பரப்பிய பாஜக பிரமுகரை உத்தனப்பள்ளி போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியைச் சோ்ந்த வெங்கடேஷ் (50), சூளகிரி தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக உள்ளாா். இவா் உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், உத்தனப்பள்ளி ஆஞ்சநேயா் கோயில் தெருவில் உள்ள பாஜக செயற்குழு உறுப்பினரான பத்மநாபன் (42), மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டுள்ளாா். இதுகுறித்து கேட்ட போது அவா் என்னை மிரட்டினாா். எனவே, அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
அதன் பேரில், உத்தனப்பள்ளி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன், பத்மநாபனை கைது செய்து, அவா் மீது ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தாா்.
Advertisement
பாஜகவினா் ஆா்ப்பாட்டம்:
பாஜக பிரமுகா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசுக்கு எதிராகவும், காவல் துறையினரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.