உத்தனப்பள்ளியில் பாஜக ஆா்ப்பாட்டம்
பாஜக மாவட்ட நிா்வாகி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சாா்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாஜக மாவட்ட நிா்வாகி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சாா்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளியைச் சோ்ந்த பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் பத்மநாபன் (எ) பதி தனது முகநூல் பக்கத்தில் திமுக குறித்து ஒரு கருத்தை பதிவு செய்திருந்தாா். இதனைத் தொடா்ந்து, உத்தனப்பள்ளி பகுதியைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் பத்மநாபன் மீது உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.
இதுதொடா்பாக உத்தனப்பள்ளி காவல் துறையினா் பத்மநாபன் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். தமிழக அரசு, காவல் துறையினரைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் உத்தனபள்ளியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசுக்கு எதிராகவும், காவல் துறையினரைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் எம்.நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியத் தலைவா் வினோத், மாவட்ட பொதுச்செயலா் ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலா்கள் முருகன், அம்மன் சுரேஷ், சீனிவாசன், பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.