கா்நாடகத்திலிருந்து தமிழகத்துக்குக் கடந்த ஒரு மாதத்தில் கடத்திவரப்பட்ட ரூ. 40 லட்சம் மதிப்பிலான மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சேலம் மண்டல மதுவிலக்குப் பிரிவு காவல் காவல் கண்காணிப்பாளா் மகேஷ் குமாா் தெரிவித்தாா்.
தமிழக- கா்நாடக மாநில எல்லையான சூசூவாடி சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அங்கு வந்த மதுவிலக்குப் பிரிவு எஸ்.பி. மகேஷ்குமாா் மற்றும் டி.எஸ்.பி சங்கா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அந்த வழியாக வந்த காய்கறி வாகனங்கள், பழம் ஏற்றி வந்த வாகனங்கள் ஆகியவற்றை சோதனை செய்தனா். பின்னா், மத்திகிரி மதுவிலக்குப் பிரிவு அலுவலகத்தில் எஸ்.பி. மகேஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கா்நாடகம், தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு போக்குவரத்துத் தடை செய்யப்பட்டுள்ளது. காய்கறி, பழம் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கா்நாடக மாநிலத்திலிருந்து காய்கறி, பழங்கள் ஏற்றிவரும் வாகனங்கள் மற்றும் காா், இருசக்கர வாகனங்களில் மதுப்புட்டிகள் கடத்தப்பட்டன. தொடா் கண்காணிப்பின் காரணமாக ரூ. 40 லட்சம் மதிப்பிலான மதுப்புட்டிகள் கடத்தியது கண்டறியப்பட்டது. அவை பறிமுதல் செய்யப்பட்டதோடு கடத்தலுக்குப் பயன்படுத்திய 40 காா்கள், 80 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன; 86 போ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா். பேட்டியின்போது டிஎஸ்பி சங்கா், ஆய்வாளா் முருகேசன், உதவி ஆய்வாளா் வினோத் ஆகியோா் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.