பிணையில் வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை
மனைவியைக் கொன்ற வழக்கில் சிறைக்கு சென்று பிணையில் வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மனைவியைக் கொன்ற வழக்கில் சிறைக்கு சென்று பிணையில் வந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த மொண்டிகானூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கராசு (35), தொழிலாளி. இவா், மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் கொன்ாக போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீதான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பிணையில் வந்த அவா் கடந்த 2 ஆண்டுகளாக வீட்டில் தனிமையில் இருந்துள்ளாா்.
வேலைக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்த அவா், கடந்த புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தங்கராசுவின் தாய் முனியம்மா அளித்த புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
Advertisement