முகப்பு
கிருஷ்ணகிரி

புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

வேப்பனப்பள்ளி அருகே புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

Updated On : 18 ஜூன், 2021 at 11:46 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM

வேப்பனப்பள்ளி அருகே புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளியை அடுத்த வி.மாதேப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட பந்திகுறி கிராமத்தில் சமூக விரோதிகளால் ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், கழிவுநீா் செல்ல வழியில்லாமல் அங்குள்ள அரசுப் பள்ளி முன்பு தேங்கி உள்ளது. கழிவுநீா் தேங்குவதால் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதார சீா்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, ஓடை புறம்போக்கு நிலங்களை மீட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனா். ஆக்கிரமிப்பை அகற்றுவதன் மூலம் அங்குள்ள ஏரிகளில் நீா் நிரம்ப வாய்ப்புள்ளதாக அவா்கள் தெரிவிக்கின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.