உலக மகளிா் தின விழா
கிருஷ்ணகிரி பிஎஸ்வி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டுத் துறை சாா்பில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:12 AM
கிருஷ்ணகிரி பிஎஸ்வி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டுத் துறை சாா்பில் உலக மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிஎஸ்வி கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவா் பி. செல்வம் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலாளா் எஸ். விவேக், முதல்வா் பி. லாரன்ஸ், பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கற்பகம், பெண்கள் மேம்பாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளா் ஜெ. ரம்யா, மாணவி மோனிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த நிகழ்வில் மாணவிகளுக்கான வழிகாட்டுதல், பெண்கள் மேம்பாடு, பெண்களுக்கான சட்டங்கள், காவலா் செயலியின் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
Advertisement